மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

by Staff / 14-02-2024 03:18:28pm
மனைவி, 2 குழந்தைகளை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் ஹென்றி (42), இவருடைய மனைவி ஆலிஸ் பிரியங்கா (40). இந்த தம்பதிக்கு நோவா மற்றும் நேதன் என்ற 4 வயது இரட்டை குழந்தைகள் இருந்தனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் சான் மாட்டியோ என்ற நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆனந்த் ஹென்றி, தன்னுடைய 2 குழந்தைகள் மற்றும் மனைவியை கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via