வனப்பகுதியில் யானைகள் மோதி கொண்டதில் யானை பலி
சத்தி புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகம், குத்தியாலத்தூர் காப்புக்காடு, மாக்கம்பாளையம் பிரிவு, சர்க்கரை பள்ளம் என்ற இடத்தில் வனப்பகுதி வழியாக வனத்துறையினர் ரோந்து சென்றனர். ரோந்தப்பணியின் போது பெண் யானை ஒன்று இறந்து கிடப்பது, கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை டாக்டர். சதாசிவம், வனக்கால்நடை உதவி மருத்துவர், சரவணக்குமார், கடம்பூர் கால்நடை உதவி மருத்துவர. சசிகுமார், & முருகன், அரிகியம் மேலுார் கிராம தலைவர், மற்றும் வனப்பணியாளர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையின் போதுஇறந்த பெண் யானைக்கு சுமார் 25 முதல் 30 வயது இருக்கலாம் எனவும் யானைகளிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக யானை இறந்இறந்திருக்கலாம்திருக்கலாம் என சதாசிவம், வனக்கால்நடை உதவி மருத்துவர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
Tags :