ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 30-08-2023 04:13:33pm
ஓமலூர் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம், ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சோபிகா (19) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் சோபிகா அதே பகுதியில் உள்ள ஊதுவர்த்தி தயாரிக்கும் கடைக்கு வேலைக்கு செல்வதாக தனது கணவர் அஜித்திடம் நேற்று காலை கேட்டுள்ளார். ஆனால் அஜித் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறிவிட்டு அருகில் உள்ள கடையில் பால் வாங்க சென்றுள்ளார்.

அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது சோபிகா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கணவர் வேலைக்கு அனுப்பாததால் புதுப்பெண் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

 

Tags :

Share via