‘இந்தியா’வின் மூன்றாம் கட்ட கூட்டத்தொடர்  மும்பை சென்றாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 31-08-2023 09:04:38am
‘இந்தியா’வின் மூன்றாம் கட்ட கூட்டத்தொடர்  மும்பை சென்றாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாஜகவுக்கு எதிராக உருவான எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்தியா’வின் மூன்றாம் கட்ட கூட்டத்தொடர் மும்பையில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸுடன் இணைந்து 27க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணிகளின் சின்னம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு அறிவிக்கப்படும். வரும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிக்கும் நோக்கில், எதிர்க்கட்சிகளின் பிரசார வியூகம் இறுதி செய்யப்படும் என தெரிகிறது. காங்கிரஸ், திமுக, சிவசேனா (உத்தவ்), என்சிபி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஜனதாதளம், ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் இதில் பங்கேற்கின்றன.இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று மும்பைசென்றாா்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்;ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செப்.1ம் தேதி இரவு 10 மணியளவில் விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

 

Tags : மும்பை சென்றாா். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share via