மர்ம காய்ச்சலால் குழந்தை பலி

by Staff / 09-01-2023 01:20:50pm
மர்ம காய்ச்சலால் குழந்தை பலி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களுக்கு தர்ஷன் (9) என்ற மகனும், சிவதர்ஷினி என்ற 3½ வயதில் மகளும் இருந்தனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குழந்தை சிவதர்ஷினி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதையடுத்து குழந்தையை பெற்றோர் சிவதர்ஷினியை அவரது பெற்றோர் பரமத்திவேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதையடுத்து சிவதர்ஷினி மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் குழந்தை சிவதர்ஷினி சிகிச்சை பலனின்றி இறந்ததாள். மர்ம காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via