லாரி ஓட்டுநர் துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீச்சு

by Staff / 09-01-2023 01:16:59pm
 லாரி ஓட்டுநர் துண்டு துண்டாக வெட்டி கிணற்றில் வீச்சு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சீரங்கனூர் மாட்டுக்காரன் வளவு பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் மணி(52) இவர் அரிசி வாங்குவதற்கு தாரமங்கலம் சென்றார். இதையடுத்து  தாரமங்கலம் அருகே உள்ள கருக்குப்பட்டி என்ற இடத்தில் மணி உடல் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் ஒரு விவசாய கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதை கண்ட அக்கம் பக்கம் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டுநர் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தாரமங்கலம் போலீசார் மாவட்ட எஸ்பி சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து  விவசாய கிணற்றில் கிடந்த ஓட்டுநர் உடலை ஓமலூர் தீயணைப்பு துறை உதவியுடன் மீட்டு மோப்ப நாய் உதவியுடன் கொலை செய்தது யார் என தாரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via