சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரிப்பு :

by Admin / 25-11-2021 11:00:30pm
சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரிப்பு :

சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரிப்பு :

கடந்த மாதத்தில் அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி  மூலம் ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.

சென்னையில் 403 அம்மா உணவகங்கள் கடந்த சில வருடமாக  விற்பனை சரிந்தது. மாநகராட்சிக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய . தனி அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.4355 ஊழியர்கள் தற்போது பணியாற்றி வருகிறார்கள்.யாரையும் பணியில் இருந்து நீக்காமல் அனைவருக்கும் வேலை கொடுக்கும் வகையில் சுழற்சி முறையில்  கூடுதலாக இருந்த  ஊழியர்களுக்கு பணிகள் பரவலாக்கப்பட்டு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

அதிகாலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு ஷிப்டு; பகல் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மற்றொரு ஷிப்டு   ஈடுபட்டுள்ளனர். தற்போது அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டுகளில் தினமும் 1.25 லட்சம் பேர் மட்டுமே உணவு சாப்பிட்டார்கள் தற்போ 1.73 லட்சமாக உயர்ந்து உள்ளது. சாப்பிடுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரம் பேர் அதிகரித்து உள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் ; அம்மா உணவகங்களை ஆய்வு செய்து சரி செய்யும் பணி நடந்தது ஒரே மாதத்தில் விற்பனை அதிகரித்து உள்ளது.தரமான உணவுகளை  வழங்கஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.  பணியாற்றிய ஒருவரையும்  நீக்கவில்லை;. சம்பளமும் குறைக்கப்படவில்லை.

 படிப்படியாக  தரம் உயர்த்தப்படும். செலவினம் குறைந்து உள்ளது. மாதத்திற்கு 1 கோடி ரூபாய்வி செலனம் குறைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

 

Tags :

Share via