19 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

by Staff / 08-02-2024 11:53:43am
19 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது

19 தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். காங்கேசன் துறைமுக முகாமில் விசாரணை நடத்திய பின், யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் ஏற்கனவே 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via