போக்சோ வழக்கில் நிலையூரை சேர்ந்த முதியவருக்கு ஆயுள் தண்டனை.
மதுரை நிலையூர் கைத்தறி நகர் துளசிராமன் (71) என்பவர்.ஒரு சிறுமியின் தந்தை 2021ல் மருத்துவமனை சிகிச்சைக்கு சென்றார். தாய்வேலைக்குச் சென்றுவிட்டார். சிறுமி, அவரது சகோதரருடன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தபோது.அச்சிறுவனை கடைக்கு பொருள் வாங்கி வருமாறு அனுப்பிவிட்டு, தனியாக இருந்த சிறுமியை துளசிராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.இதுகுறித்து திருமங்கலம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். போக்சோ வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி முத்துகுமரவேல்: துளசிராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 6 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags :