மாணவர்களை கொல்ல முயன்ற சக மாணவர்
தூத்துக்குடியில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தேர்வில் பிட் அடித்துள்ளார். இதனை கண்ட 2 சக மாணவர்கள், பிட் அடித்தால் ஆசிரியரிடம் சொல்லி விடுவோம் என கூறி அந்த மாணவரை மிரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர் இவர்கள் இருவரையும் கூர்மையான கம்பியால் குத்தியுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Tags :