பண மோசடி செய்த மர்ம நபர்கள்

by Staff / 03-09-2023 04:56:57pm
பண மோசடி செய்த மர்ம நபர்கள்

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 46 வயதான ஜெயபிரகாஷ் இவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை கிடைக்கும், நல்ல லாபம் ஈட்டலாம் என மெசேஜ் வந்துள்ளது. பணியை முடித்து பணம் சம்பாதிக்குமாறு அவரிடம் தெரிவித்தனர். ஜெயபிரகாஷ் அவர்களின் வார்த்தைகளை நம்பி, அவர்கள் பணத்தை அனுப்பச் சொன்ன வங்கிக் கணக்குகளுக்கு 16 பரிவர்த்தனைகள் மூலம் ரூ. 11, 73, 542/- தொகையை செலுத்தினார் ஆனால் அவர்கள் கூறியபடி பணத்தையும் லாபத்தையும் திருப்பித் தரவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இது குறித்து நேற்று கோபாலபுரத்தில் உள்ள மாநகர சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via