பஸ் நிலையத்தில் மாணவர்கள் திடீர் மோதல்

by Staff / 03-09-2023 04:49:55pm
பஸ் நிலையத்தில் மாணவர்கள் திடீர் மோதல்

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.இந்த நிலையில் நேற்று மாணவர்கள் ஏராளமானோர் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது புத்தேரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 4 பேர் அங்கு வந்தனர். பஸ் நிலையத்தில் வைத்து அவர்களுக்குள் திடீரென மோதல் உருவானது. ஒரு மாணவரை மற்ற 3 பேர் சேர்ந்து தாக்கினர். இதைப்பார்த்த பொதுமக்கள் மற்றும் இளம்பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் வருவதை அறிந்த மாணவர்கள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் காயம் அடைந்த மாணவரை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

 

Tags :

Share via