சங்கரன்கோவில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 23-03-2024 04:32:25pm
சங்கரன்கோவில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவேங்கடம் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. தகவலின் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்றும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். இந்த நிலையில், ஆலையில் இருந்த பணியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

 

Tags :

Share via