எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல நோட்டாவிற்கு வாக்களிக்க கோஷமிட்ட மாணவிகள்

by Staff / 23-03-2024 04:46:16pm
 எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல நோட்டாவிற்கு வாக்களிக்க கோஷமிட்ட மாணவிகள்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையத்தில், நடைபெற இருக்கும் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் புதிய வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி மற்றும் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.

பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் அங்கன்வாடி பணியாளர்கள் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு மனித சங்கிலி ஆக சாத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை பேருந்து நிறுத்தம் வரை நின்றனர்.

அப்போது மாணவிகளிடையே மனித சங்கிலி பேரணியை துவக்கி வைக்க வரும் போது அங்கிருந்து மாணவிகள் சிலர் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல வாக்களிப்பிர் நோட்டாவிற்கு என புன்னகையுடன் கூறினர், அதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மகிழ்ச்சி பொங்க புன்னகையுடன் கையை அசைத்தாவாரு சென்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சுவாரசியமாக காணப்பட்டது.

 

Tags :

Share via