நாட்டு துப்பாக்கி வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர் கைது

by Staff / 03-09-2023 05:04:44pm
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த செங்கல் சூளை உரிமையாளர் கைது

கோவை வனச்சரகம் தடாகம் அடுத்த, நஞ்சுண்டாபுரம் பகுதியில் நேற்று, வன களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியின்போது, ஞானசேகரன் என்பவரது செங்கல் சூளையில், நாட்டு துப்பாக்கி ஒன்று, பயன்படுத்தாத தோட்டா ஒன்று, பயன்படுத்திய தோட்டா, 30, தோட்டா செய்வதற்கான கரிமருந்து, சுமார் 350கிராம், ஆகியவை வைத்திருந்த ஞானசேகரனிடம் இருந்து, பறிமுதல் செய்யபட்டது உரிமமில்லாத துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் என்பது முதற்கட்ட விசாரணை மூலம் தெரியவந்ததையடுத்து, ஞானசேகரனை, கைது செய்த வனத்துறையினர், தடாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் மூன்று துப்பாக்கிகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது, இதனை தொடர்ந்து ஞானசேகரன் மீது வழக்கு பதிவு செய்த தடாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via