அகதிகள் முகாம் தலைவர் தூக்கிட்டு தற்கொலை

by Staff / 28-09-2023 12:42:52pm
அகதிகள் முகாம் தலைவர் தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் பிறேமராஜ் ரவிஷாந்தர்(54). , இவர் இலங்கை அகதிகள் முகாமில் தலைவராக இருந்து வருவதோடு, அகதிகள் மகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார், இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர், இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via