இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்த தருணம்

by Staff / 14-04-2024 04:21:39pm
இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்த தருணம்

சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இதில், 99% ட்ரோன்கள், ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்னதாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம்சாட்டிய இரான், தற்போது பதில் தாக்குதல் நடத்தி உள்ளது.

 

Tags :

Share via