யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை

by Staff / 23-11-2022 12:14:15pm
 யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் பொதுமக்களை சீண்டி பிராங்க் செய்யும் யூடியூப் சேனல்கள் ஏராளமாக உள்ளன. இந்நிலையில் பிராங்க் வீடியோக்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.பிராங்க் வீடியோக்களை வெளியிடும் கட்டெரும்பு, குல்பி, ஆரஞ்சு மிட்டாய், ஜெய்மணிவேல், நாகை 360 ஆகிய 5 யூடியூப் சேனல்கள் மீது ரோகித் குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via