கேரளாவின் முதல் பெண்தபால் ஊழியர் கே.ஆர்.ஆனந்தவல்லி காலமானார்.

by Editor / 03-10-2022 11:04:52am
கேரளாவின் முதல் பெண்தபால் ஊழியர்  கே.ஆர்.ஆனந்தவல்லி காலமானார்.

கேரளாமாநிலத்தின் முதல் பெண் தபால்ஊழியராக  நியமனம் செய்யப்பட்டவர் கே.ஆர்.ஆனந்தவல்லி (வயது 90). இவரது கணவர் ராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர்,கே.ஆர்.ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்தபள்ளி தபால் நிலையத்தில் முதன் முதலாக பெண் தபால்ஊழியராக பணியில் சேர்ந்தார்.

பட்டதாரியான அவர், கேரளாவில் முதல் பெண் தபால்ஊழியர்  என்ற பெருமையை பெற்றவா்.. தொடர்ந்து அவர் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால்ஊழியராகவும்,பின்னர் பதவி உயர்வு பெற்று  அஞ்சலக அலுவலர் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றியுள்ளார்.

கடந்த 1991-ம் ஆண்டு கே.ஆர்.ஆனந்தவல்லி பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஆலப்புழாவில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக   உடல்நிலை பாதிக்கப்பட்டு,  மருத்துவ சிகிச்சை பெற்று வந்தவா்.. நேற்று உடல் நலக்குறைவால் தனது வீட்டில் மரணம் அடைந்தார்.அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via