உதயநிதி பேசியதில் தவறு இல்லை - மனோ தங்கராஜ்

by Staff / 04-09-2023 03:08:31pm
உதயநிதி பேசியதில் தவறு இல்லை - மனோ தங்கராஜ்

உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார்.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அமைச்சர் மனோ தங்கராஜ், “சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை. பாஜகவினர் ஹிட்லர் போன்று முசோலினி போன்று பொய்யையே திரும்ப திரும்ப கூறி, மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகின்றனர். அவர்களுக்கும் சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்து சமூகத்தை அவர்கள் நேசிக்கவும் இல்லை, அதை உயர்த்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via