பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

by Admin / 24-07-2021 09:31:39pm
பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை



விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் ரோஸ்சலி (வயது 18). இவர் பொம்மையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு படித்து வந்தார்.இந்த நிலையில் ரோஸ்சலி சரியாக படிக்காமல் இருந்தார். இதனால் ரோஸ்சலியை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த ரோஸ்சலி வீட்டில் இருந்த வி‌ஷத்தை குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஸ்சலி பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via