முந்திரிக்காட்டில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

by Admin / 14-08-2021 03:46:50pm
முந்திரிக்காட்டில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது

முந்திரிக்காட்டில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சக்கரவர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாருக்கு முந்திரிக்காட்டில் சாராய ஊறல் வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடையார்பாளையத்தை அடுத்த ஒக்கநத்தம் கிராமத்தை சேர்ந்த ஆதி என்ற சாமிநாதனுக்கு(வயது 47) சொந்தமான முந்திரிக்காட்டில் 4 பேரல்களில் 60 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து சாமிநாதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

Tags :

Share via