சனாதனம் ஒழியும் வரை எனது பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

by Editor / 05-09-2023 10:49:18pm
சனாதனம் ஒழியும் வரை எனது பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் முகேஷ் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மாவட்ட செயலாளர் ஜெயபாலன் பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் மாதம் நடைபெறக்கூடிய இளைஞரணி மாநாட்டிற்காக அழைப்பு விடுத்து அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த கூட்டத்தில் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் ரூபாய் 50 லட்சமும் தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூபாய் 10 லட்சம் வளர்ச்சி நிதியாக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியாவுக்கு முன்னோடியாக இளைஞர் அணி என்ற அணியை உருவாக்கியது திமுக தான்.திமுகவில் உழைத்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம்.2019ல் பொறுப்பேற்ற பின்னர் இளைஞர் அணி சேர்க்கை நடத்தப்பட்டது.சமீபத்தில் நடந்த மாநாடு எதுக்கு நடந்து என்று தெரியாமல் எப்படி எல்லாம் நடத்த கூடாது என்பதை போல் ஒரு மாநாடு நடந்தது.அதிமுக மாநாட்டில் 32 தீர்மானங்கள் நடந்தது ஆனால் ஒரு தீர்மானம் கூட நீட்டை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றவில்லை.திமுக இளைஞரணி மாநாடு கொள்கை விளக்க மாநாடாக அமையும்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.31 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுவருகிறது.அடுத்த மாநில அரசுகளும் வந்து இந்த திட்டத்தை பார்த்து பாராட்டி வருகிறது.மாணவர்கள் கல்வி கற்க பள்ளிக்கு வரவேண்டும் என தொடங்கப்பட்டது காலை உணவு திட்டம்.மாணவர்களும் பெற்றோர்களும் இந்த திட்டத்தை வாழ்த்துகிறார்கள்.பெற்றோர்கள் எங்களது குழந்தைகளை பார்க்க திராவிட மாடல் அரசு இருக்கிறது என பாராட்டுகிறார்கள்.தமிழகத்தை வளர்ச்சி பாதையில் செலுத்தும் அரசாக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது.நான் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பேச்சு ஒரே நாளில் மறைந்திருக்கும் பாஜக பொய் செய்தி பரப்பியதன் விளைவு நாடு முழுதும் அதே பேச்சாக தற்போது இருக்கிறது.சனதானத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன் பாஜக இனப்படுகொலை செய்ய சொன்னதாக பொய் செய்தி பரப்புகிறேன்.சமீபத்தில் சென்னையில் திராவிட ஒழிப்பு மாநாடு நடந்தது.திராவிட இயக்கத்தை கூட்டி கொண்டு கொலை செய்ய போவதற்காக அந்த மாநாடு நடத்தப்பட்டதா?.சனாதனம் ஒழியும் வரை எனது குரல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.எனது தலைக்கு பத்து கோடி என சொன்ன சாமியார் போலி சாமியார்.போலி சாமியாரை அடித்து விரட்ட வேண்டும் என்றால் சனதனத்தை அடித்து ஒழிக்க வேண்டும்.எனக்கு சென்னையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து வடமாநிலத்தவர்களை அடித்து விரட்டுவதாக பொய் செய்தி பரப்பி குளிர் காய்ந்தது தான் பாஜக.இந்தியவின் பெயரை மாற்றபோகின்றனர்.30 கட்சிகள் சேர்ந்து மும்பையில் இந்தியா கூட்டணி கூட்டம் நடத்தப்பட்டது.இந்தியா வெற்றி பெறவேண்டும் என எதிர்கட்சிகள் பேசிவருதன் காரணமாக இந்தியா என்ற பெயரை மாற்ற நினைக்கின்றனர்.மோடி எங்கு சென்றாலும் திமுக ஆட்சி வாழ்வது கலைஞர் குடும்பம் தான் என சொல்கிறார்.ஆம் திமுகவால் வாழ்வது ஒட்டுமொத்த தமிழகத்தில் இருக்கும் திமுக குடும்பம்.9 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் வாழ்வது அதானி மட்டும் தான்.இந்தியா முழுவதும் அதானி ரயில் நிலையம்,விமான நிலையம் போன்றவைகள் வந்துவிட்டது.மோடி விமானம் இல்லாமல் கூட வெளிநாடு செல்வார் அதானி இல்லாமல் எங்கும் செல்லமாட்டார்.தமிழக அரசு மத்திய அரசுக்கு ஏராளமான நிதிதை வரியாக செலுத்தினால் ₹1 க்கு தமிழகத்திற்கு நிதியாக 29 பைசா மட்டும் தான்.5 லட்சத்து 16 ஆயிரம் கோடி வரியாக தமிழகம் செலுத்திய நிலையில் தமிழகத்துக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி மட்டும் நிதியாக கிடைத்துள்ளது.உ.பி 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி வரி கொடுத்தது ஆனால் அவர்களுக்கு 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.5.3% இருந்த வளர்ச்சி விகிதமாக இருந்த நிலையில் 4.7% மாக குறைந்துள்ளது.மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாயாக சமையல் எரிவாயு விலை உயரும்.பி.எம்.கேர் நிதியாக 32 ஆயிரம் கோடி வசூலிக்கப்பட்டது.அதற்கு கணக்கு கேட்டால் ஒரு பதிலும் இல்லை.பாசிஸ்ட்களிடம் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும் என ஸ்டாலின் சொல்லிவருகிறார்.இந்தியாவை நமது இந்திய கூட்டணி காக்கும்.பாசிச சனதான பாஜகவை ஒழிக்கவேண்டுமானல் அடிமை அதிமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும்.அடிமைகளின் ஓனர்களான பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் அதற்கான நேரம் தான் 2024 தேர்தல் என பேசினார்.

சனாதனம் ஒழியும் வரை எனது பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
 

Tags : சனாதனம் ஒழியும் வரை எனது பேச்சு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

Share via