10 ரூபாய் கொடுத்துவிட்டு சிறுமியை சீரழித்த முதியவர்

by Staff / 06-09-2023 05:25:01pm
10 ரூபாய் கொடுத்துவிட்டு சிறுமியை சீரழித்த முதியவர்

மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தின் கோரிபாரி பகுதியில் 68 வயது முதியவர் ஒருவர், 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு மாத காலமாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில், சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு ஒவ்வொரு முறையும் 10 ரூபாய் கொடுத்து விட்டு, வெளியே சொன்னால் சிறுமியை கொன்று விடுவேன் என மிரட்டி வந்துள்ளார் என தெரிவித்தனர்.

 

Tags :

Share via