காரில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்

by Staff / 08-09-2023 04:17:38pm
காரில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கலைஞானபுரம் ஊரின் அருகே காட்டுப்பகுதியில் காரில் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். இதனை அடுத்து தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த நிலையில் உள்ள சடலத்தை ஆய்வு செய்தபோது அதில் கொல்லப்பட்டவர் ஆண் என்பது தெரிய வந்தது. போலீசார் விசாரைணையில், ராமநாதபுரம் சாயல்குடி பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் நாகஜோதி (48) என தெரியவந்தது. நாகஜோதியை கொலை செய்த மர்ம கும்பலை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கொலையாளியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via