சில வரிகளில் சின்ன சின்ன செய்திகள்

by Editor / 22-11-2021 04:18:53pm
சில வரிகளில் சின்ன சின்ன செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் ரயில் நேரம் மாற்றம்
மழை வெள்ளம் காரணமாக இணை ரயில் தாமதமாக வருவதால் திருநெல்வேலியிலிருந்து இன்று மாலை 05.35 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண் 16787 திருநெல்வேலி - ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 10.00 மணிக்கு  புறப்படும்.

பெருந்துறை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த உயிரியல் ஆசிரியர் கைது.

நடப்பு கல்வி ஆண்டிற்கான 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் புதிதாக 'பயிற்று மொழி' சேர்க்கப்படுகிறது. 
1 முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்கள் எந்த பயிற்று மொழியில் பயின்றனர் என்ற விவரம் வகுப்பு வாரியாக சேர்க்கப்பட உள்ளது. மாணவர்களின் பயிற்று மொழி விவரங்களை தனித்தனியே இணையத்தில் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு. 

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி பதவியேற்பு
- ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நடிகர் கமலஹாசன் கொரோனா தொற்று உறுதியானது.அமெரிக்க பயணம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தன் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

திடகாத்திரமான காவல்துறை அதிகாரி பூமிநாதன் கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்-டாக்டர்.க.கிருஷ்ணசாமி.

திண்டுக்கல் அருகே பாலியல் புகாரில் சிக்கிய கல்லூரி தாளாளர் ஜோதி முருகனை கைது செய்ய போலீசார் தீவிரம்.
மாணவ, மாணவிகள் எந்தவித தயக்கமும் இன்றி பாலியல் புகார்களை அளிக்கலாம் -அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி * புகார் அளிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். 
* போக்சோ சட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு நடத்த அறிவுறுத்தல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

27.02.2019 அன்று பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக விங் கமாண்டர்  அபிநந்தன் வர்தமானுக்கு, பாதுகாப்புத்துறையில் வழங்கப்படும் 3வது உயரிய விருதான "வீர் சக்ரா" விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  வழங்கினார்.

பெருந்துறை சீனாபுரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்ய கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் போராட்டம்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி உயிரியல் ஆசிரியர் கைதான நிலையில் தலைமை ஆசிரியரையும் கைது செய்யக் கோரி போராட்டம்.

சென்னை, மெரினா கடற்கரைக்கு இன்று பொதுமக்கள் செல்ல தடை விதிப்பு; மெரினாவில் உள்ள சர்வீஸ் சாலை மூடல்,ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் மெரினாவில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் பரவிய நிலையில் தடை விதிப்பு.

ஜெய்பீம் விவகாரம்-ஆதரவும்..எதிர்ப்பும் 
 
அரியலூர்: செந்துறையில் நடிகர் சூர்யாவை கைது செய்யக் கோரி பாமக சாலை மறியல்.
மதுரை: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூர்யாவுக்கு வாழ்த்து கூறி, பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் முழக்கம்.

 

Tags :

Share via