அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

by Staff / 09-09-2023 12:13:41pm
அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் சீண்டல்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கட்டக்கடை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டுள்ளார். பெண்ணை வலுக்கட்டாயமாக தகாத முறையில் தொட்டும், பலமுறை எச்சரித்த போதிலும் விடாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெண் போலீசில் புகார் அளித்தார். குற்றவாளி கேரள அரசுப்போக்குவரத்து கழக டிப்போவில் மெக்கானிக் ஆக பணிபுரியும் பிரமோத் என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தெரிவித்தார். அங்கு விரைந்த கணவர், குற்றவாளி பிரமோத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via