சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் தர்ணா

by Staff / 10-09-2023 12:35:41pm
சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் தர்ணா

திறன்மேம்பாட்டு வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்திக்க சிஐடி போலீசாரிடம் அனுமதி கோரியிருந்தார். விஜயவாடாவில் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்த சென்ற பவன் கல்யாணை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், நள்ளிரவில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
 

 

Tags :

Share via