ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

by Staff / 11-09-2023 11:35:02am
ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

அவதூறு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அருந்ததியர் சமூகம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்பபப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். இதனிடையே திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதற்காக நாளை அவர் காவல் நிலையத்தில் ஆஜராவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via