அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் மாநில அரசு நியமிக்க சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி மசோதா தாக்கல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முதலமைச்சர் வைப்பதற்கான அதிகாரம் அளிப்பதற்கான திருத்த சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் அறிமுகம் செய்தார் .குஜராத் தெலுங்கானா கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சட்டங்களில் துணைவேந்தரை அரசின் இசைவுடன் நியமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 1996 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் கலைக்கழக சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .புதிய சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ளது.
Tags :