மரம் பிரச்சனையால் மர்டர் அண்ணனை தம்பி அடித்துக்கொலை

by Staff / 29-04-2022 04:57:20pm
மரம்  பிரச்சனையால் மர்டர் அண்ணனை  தம்பி அடித்துக்கொலை

கள்ளக்குறிச்சி தேக்கு மரம் யாருக்கு சொந்தம் என சகோதரர்களிடையே இந்த தகராறில் மூத்த சகோதர்  தம்பியும் மனைவியின் உறவினர்களுடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருகோவிலூர் அடுத்த செம்படை கிராமத்தைச் சேர்ந்த விவசாய வேலை செய்யும் சக்கரவர்த்தி மற்றும் சந்திரசேகர் ஆகிய சகோதரர்களுக்கு இடையே அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைய சகோதரர் சந்திரசேகர் தனது விவசாய நிலத்தில் இருந்து ஆறு தேக்கு மரங்களில் நான்கு மரங்களை வெட்டி பயன்படுத்தியதாகவும். இதனால் மீதமிருந்த இரண்டு மரங்கள் தனக்கு சொந்தம் என நினைத்த மூத்த சகோதரர் சக்கரவர்த்தி அதனை சீர் செய்யும் வேலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆத்திரமடைந்த சந்திரசேகர் அவரது சம்பந்தி ஆட்டோகாரன் உள்ளிட்ட உறவினர்களை அழைத்து சென்று சக்கரவர்த்தியின் வீட்டின் கதவை உடைத்து அவரை வெளியே இழுத்து வந்து கட்டையால் அடித்து உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த விவகாரம் தொடர்பாக 3 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக உள்ள சந்திரசேகர் மற்றும் ஆட்டுக்காரன் ஆகியோர் தேடப்பட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via