தூக்கு மாட்டி உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்

by Staff / 29-10-2022 02:54:40pm
 தூக்கு மாட்டி உயிரிழந்த டாஸ்மாக் விற்பனையாளர்

கரூர் மாவட்டம் குளித்தலை தண்ணீர்பள்ளி சேடர் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (45). இவர் வை. புதூர் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரின் அண்ணன் மோகன்குமார் என்பவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவ சிகிச்சை செய்து வந்துள்ளனர். தனது அண்ணனுக்கு கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக செலவு செய்து வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை செய்ய பணம் தயார் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனை காரணமாக கோபாலகிருஸ்ணன் நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் வேஷ்டியால் தனக்குத் தானே தூக்கு மாட்டி கொண்டுள்ளார். இதை பார்த்த அவரின் உறவினர்கள் அவரின் உடலை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் மனைவி ராதா குளித்தலை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் குளித்தலை போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via