பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்

by Editor / 15-08-2022 03:32:45pm
பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றினார்

இந்தியாவின் 75வது சுதந்திர தினம்  இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தின் முக்கிய நிகழ்வாக  பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில்  தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக டெல்லி செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படைகளின் சார்பில் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் விமானப்படை ஹெலிக்காப்டர் மூலம் தேசியக்கொடி மீது மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.

 

Tags :

Share via