தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

by Staff / 01-12-2023 04:06:49pm
தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே குள்ளம்பட்டி பிரிவு ரோடு பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7. 30 மணி அளவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு தலை மட்டும் தனியாக கிடந்தது. தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன்திருமலை (24) என்பவரை பிடித்து காரிப்பட்டி போலீசார்விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர்தான் கொலையாளி என்பது தெரிய வந்தது.அவர் கொடுத்த தகவலின் பேரில் கொலை செய்யப்பட்டவரது உடல் அக்ரஹார நாட்டாமங்கலம் ஏரிக்கரையில் மீட்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் வாழப்பாடியை அடுத்த நடுப்பட்டி பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி குமார் (43) என்பது தெரியவந்தது. உடனே போலீசார் கொலை வழக்கில் திருமலையைகைது செய்தனர்.

 

Tags :

Share via