கலைஞர் மகளிர் உரிமைத்தொகை-வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி பார்க்கும் சோதனை முயற்சி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வரும் செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்தநாள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆறு லட்சத்து 50 ஆயிரம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கில் ஒரு ரூபாய் செலுத்தி பார்க்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
உரிமைத் தொகை பெற விண்ணப்பித்து உள்ளவர்களின் வங்கிக் கணக்கு சரியானதாக உள்ளதா என்று அறிந்து கொள்ளும் முகமாக ஒவ்வொரு தேர்வரின் வங்கி கணக்கிலும் ஒரு ரூபாய் செலுத்தப்பட்டு கணக்கு சரியான தானா உள்ளதாக என்று சரி பார்க்கும் நடைமுறை வங்கியின் உதவியோடு அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.. வரும் செப்டம்பரில், தமிழகத்தில் உள்ள ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கலைஞர் மகளிர்உரிமைத்தொகை வழங்கும் நிகழ்வு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினால் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்படுகிறது.
Tags :