6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு

by Editor / 01-01-2023 10:33:01pm
 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு  நாளை பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்ததை அடுத்து டிச.,24 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.இந்நிலையில், விடுமுறை முடிந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.1 முதல் 5-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி வகுப்பு நடைபெற இருப்பதால், அந்த வகுப்புகளுக்கு ஜன.,5-ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

 

Tags :

Share via