ஏலியன்களின் இரண்டு சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியது. 

by Editor / 14-09-2023 09:58:59am
ஏலியன்களின் இரண்டு சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியது. 

மனிதன் அல்லாத வேற்றுகிரகவாசிகளின் (ஏலியன்) இரண்டு சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியுள்ளது. இவை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இந்த சடலங்கள் வேற்றுகிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸின் சடலங்களாக இருக்கும் என்று தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் இந்த சடலங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெரு நாட்டில் கியூஸ்கோ பகுதியில் செயல்படும் சுரங்கம் ஒன்றில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 3 கை விரல்கள் மட்டுமே காணப்படுகின்றன. பார்ப்பதற்கு மனிதனை ஒத்த சாயலில் ஆனால் வேற்றுகிரகவாசிகள் உருவத்தில் இவை உள்ளன.

 

Tags : ஏலியன்களின் இரண்டு சடலங்களை மெக்சிகோ அரசு காட்சிப்படுத்தியது. 

Share via