விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து நவம்பர் 21, 29ஆம் தேதிகளில் போராட்டம் அறிவிப்பு

by Editor / 19-11-2023 09:55:53am
விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து நவம்பர் 21, 29ஆம் தேதிகளில் போராட்டம் அறிவிப்பு

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு இந்த பிரச்னை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயிகளை வஞ்சிக்கும் உள்நோக்கத்தோடு  செயல்பட்ட தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலுவை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும் விவசாயிகளின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்து நவம்பர் 21, 29ஆம் தேதிகளில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்தார்.

 

Tags : நவம்பர் 21, 29ஆம் தேதிகளில் போராட்டம் அறிவிப்பு

Share via