எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறி உள்ளேன்: : சசிகலா அதிரடி

by Editor / 01-07-2021 06:17:11pm
எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறி உள்ளேன்: : சசிகலா அதிரடி



எம்ஜிஆருக்கே நான் ஆலோசனை கூறியுள்ளேன் என்றும் எம்ஜிஆர் நான் கூறும் ஆலோசனைகளை பொறுமையாக கேட்டுக் கொண்டுள்ளார் என்றும் சசிகலா அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக சசிகலா தினமும் ஆடியோ மூலம் அதிமுக தொண்டர்கள் மற்றும் பிரமுகர்களுடன் பேசிவருவது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் ஆடியோவில் எம்ஜிஆருடன் சேர்ந்து நான் அரசியல் பயணம் செய்ததாகவும், அது பலருக்கு தெரியாது என்றும், எம்ஜிஆருக்கு நான் ஆலோசனை கூறி உள்ளேன் என்றும், அந்த ஆலோசனைகளை அவர் பொறுமையாக கேட்டு ஏற்றுக் கொள்வார் என்றும் கூறியுள்ளார்.
கட்சி தொடர்பாக பல கருத்துக்களை எம்ஜிஆர் தன்னிடம் கேட்டுள்ளதாகவும், இளம் வயதிலேயே அரசியலில் முதிர்ச்சியுடன் செயல்பட்டதாகவும் சசிகலா பேசியுள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த ராமசாமி என்பவருடன் சசிகலா பேசிய இந்த ஆடியோ அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஜெயலலிதா கோபத்தில் சில முடிவுகளை எடுத்த போது பொறுமையாக அமர்ந்து பேசி அவரை சமரசம் செய்தது நான் தான் என்றும் எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக பிளவுபட்டு இருந்தபோது அதிமுகவை ஒன்று சேர்த்து வைப்பதில் முக்கிய பங்கை நான் தான் செய்தேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.
அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு இல்லை என  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் தான் அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆருக்கே ஆலோசனை கூறியதாக சசிகலா  பதிலடி கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via