பாம்பன் பாலம் பராமரிப்பு: ரயில்களின் ரத்து  நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

by Editor / 01-07-2021 06:18:56pm
பாம்பன் பாலம் பராமரிப்பு: ரயில்களின் ரத்து  நேரம் மாற்றம் குறித்த அறிவிப்பு

 

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ஒருசில ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
* பாம்பன் பாலம் பராமரிப்பு பணி காரணமாக ராமேஸ்வரம் மண்டபம் இடையே ரயில்கள் செல்லாது
* ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட இருந்த திருப்பதி சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும்
* ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சிறப்பு ரயில் மண்டபத்திலிருந்து இரவு 8.52 மணிக்கு புறப்படும்
* மாலை 5.45 ம்ணிக்கு சென்னையிலிருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்
* இரவு 7. 15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்படும்
* குஜராத் மாநிலத்தில் இருந்து 29ஆம் தேதி புறப்பட்ட ரயில் மண்டபத்துடன் நிறுத்தப்படும்
* மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் சிறப்பு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு தென்னக ரயில்வே தனது செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

 

Tags :

Share via