ராட்சத அலையில் சிக்கி குடும்பத்தினரின் கண்முன்னேயே தொழிலாளி உயிரிழப்பு
திருவொற்றியூர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மல்லிகாபுரத்தில் இருக்கும் பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் ரமேஷ் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளார். அதன்பிறகு ரமேஷ் திருச்சினாங்குப்பம் கடலில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து குளித்துள்ளார்.
அப்போது ராட்சச அலை ரமேஷை கடலுக்குள் இழுத்துச் சென்றதைப் பார்த்து அவரது மனைவி மற்றும் மகன்கள் கதறி அழுதுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடலுக்குள் சென்று தண்ணீரில் மூழ்கிய ரமேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Tags :