மருத்துவக் கல்லூரி மாணவி ஓட்டி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து
சென்னை மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர் பகுதியில் காவியா என்பவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் காவியாவும், அவரது நண்பரான அக்சத் என்பவரும் இரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வண்டலூர்-மஞ்சூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது காவியா அதிவேகமாக காரை ஓட்டியுள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரை தாண்டி சர்வீஸ் சாலைக்குள் பாய்ந்தது. பின் கார் அங்கு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தர்ஷினி என்ற சிறுமியை அருகிலுள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு நடைபெற்ற விபத்து காட்சிகள் அப்பகுதியில் பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவியா மீது வழக்குப்பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :