பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மூதாட்டி உட்பட 2 பேர் பலி

by Editor / 31-12-2022 08:48:31am
பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியதில் மூதாட்டி உட்பட 2 பேர்  பலி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மேட்டுத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பட்டாசுக்கடை உரிமையாளர் தில்லை குமார் மற்றும் மூதாட்டி பெரியக்காள் (73) ஆகியோர் உயிரிழந்தனர். இதில், படுகாயமடைந்த 5 பேர் நாமக்கல் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via