8 வயது சிறுவனை கடத்திய கும்பலை மடக்கிப்பிடித்த போலீசார்..

by Staff / 10-11-2023 01:33:34pm
8 வயது சிறுவனை கடத்திய கும்பலை மடக்கிப்பிடித்த போலீசார்..

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 8 வயது சிறுவனை ஆந்திராவிற்கு காரில் கடத்திச் சென்ற கும்பலை மடக்கிப் பிடித்த போலீசார். ஓமலூர் அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் 38 இவரது வீட்டிற்கு நேற்று மாலை 4 பேர் கொண்ட கும்பல் காரில் வந்தனர். அவர்கள் திடீரென வெங்கடாசலத்தின் 8 வயது மகனை பிடித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதனைக் கண்ட வெங்கடாசலம் தனது மகனை கடத்திச் செல்வதாக கூச்சலிட்டார் அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் சிறுவனை ஏற்றிக்கொண்டு கார் பறந்தது. இதுபற்றி வெங்கடாசலம் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில் ஈடுபட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு போலீசாருக்கு தகவல் தந்து உஷார் படுத்தினர். மேலும் ஒரு தனிப்படையினர் பெங்களூர் நோக்கி பின் தொடர்ந்து நோக்கி சென்று மடக்கி பிடித்தனர்.

 

Tags :

Share via