அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் விடுப்பு எடுக்க தடை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. சேலம் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து பணிமனைகளிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விடுப்பு எடுக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே விடுப்பில் உள்ளவர்கள் உடனே பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாக இருந்தால் மட்டும் விடுப்பு அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags :