பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம்-ஆட்சியர் கமல் கிஷோர்

by Editor / 29-01-2024 10:31:54pm
 பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம்-ஆட்சியர் கமல் கிஷோர்

 தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக  இன்று (29.01.2024)  கமல் கிஷோர்  பொறுப்பேற்றுக் கொண்டார். . பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தென்காசி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமித்ததற்கு  தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தென்காசி விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.   இதற்கு முன்னர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.  மேலும் பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம்.  அதற்கு எந்தவித தடையும் இல்லை எனவும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக முழு முயற்சி எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.    மேலும், தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு கொண்டுவரப்படும் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் அதற்கு தேவையான முழு நடவடிக்கைகளும்  எடுப்பேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே .கமல் கிஷோர்   தெரிவித்தார். 

 

Tags : பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் என்னை சந்தித்து கோரிக்கைகளை கூறலாம்-ஆட்சியர் கமல் கிஷோர்

Share via