முகேஷ் அம்பானியின் உடைய செயல் பாராட்டப்படக்கூடியதுதான்

by Admin / 26-04-2023 12:34:17pm
 முகேஷ் அம்பானியின் உடைய செயல் பாராட்டப்படக்கூடியதுதான்

முகேஷ் அம்பானியின் செயல் வியக்கத்தக்கதாக- பாராட்டப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. தன்னுடன் படித்த, தன்னுடைய நண்பர் தன் நிறுவனத்தின்  இயக்குனராக இருந்து செயல்பட்டு கொண்டு வரக்கூடிய ஒருவருக்கு, மும்பையின் மத்திய பகுதியில் உள்ள 1500 கோடி ரூபாய் மதிப்புடைய ஒரு மிகப் பிரம்மாண்டமான பங்களாவை தானமாக தந்திருக்கிறார் என்கிற செய்தி அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்து கொண்டிருக்கிறது. சாதாரணமான, ஒரு சின்ன உதவி செய்தாலே ஊர் முழுக்க பரப்பக்கூடிய இந்த உலகத்தில் ,ஒரு மிகப் பெரிய ஒரு மனநிலை உடையவர் தான் இது போன்ற செயலைச் செய்ய முடியும். பத்து ரூபாய்க்கு உதவி செய்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பர தேடக்கூடிய உலகம் இது .ஆனால், தன்னுடைய வியாபாரம் ,தன்னுடைய தொழில், தன்னுடைய நிறுவனங்கள், தன்னுடைய முன்னேற்றத்திற்கு பங்களித்த ,தன்னுடைய வகுப்புத் தோழர், தன்னைப் போன்ற ஒரு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று நினைத்திருக்கின்ற முகேஷ் அம்பானியின் செயல் பாராட்டிற்குரியது. சாதாரணமாக இத்தனை பெரிய மனது வருமா என்றால் ,அது யோசித்துப் பார்க்க வேண்டும். முகேஷ் அம்பானியின் உடைய தந்தையார் தின வாடாகிக்கு கடைகளை எடுத்து அதன் வழியாக தம் வியாபாரத் தொழிலை நடத்தி பொருளீட்டி இந்தியாவில் முக்கியமான பணக்காரர்களுள் ஒருவராக மாறியவர் .அவர் வீட்டுப் பிள்ளை முகேஷ் அம்பானி .அந்தத் தொழிலை  ஏற்று இன்று உலக பணக்காரர்கள்  பட்டியலில் பத்தாவது இடத்திற்கு உள்ளே இருக்கிறார் என்கிற ஒரு செய்தியே வியப்பளிக்க கூடியது .உழைப்பு, உழைப்பு .புதிய சிந்தனை, புதிய சிந்தனையை நடைமுறைப்படுத்துவது, அதன் வழியாக பொருள் ஈட்டுவது,, எல்லோ மக்களையும் சென்றடைய கூடிய புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி எளிமையாக்குவது என்பதுதான், இவருடைய தொழிலினுடைய ரகசியம். இவர் இணையதளத்திற்குள்= செல்போன்குள் காலடி வைத்த பிறகுதான் சராசரியாக இருக்கிறவர்கள் கைகளில் செல்போனும் இணையதளமும் இருக்கின்,றன. ராஜீவ் காந்தியின் ஆட்சி காலத்தில் அவருடைய அறிவியல் ஆலோசகராக இருந்த சாம் பிட்ரோடா வின்  தொலைநோக்கு சிந்தனையின் அடிப்படையில் தான் இந்தியாவிற்குள் செல்போனை அறிமுகம் படுத்தப்பட்டது .அறிமுகப்படுத்தியது ஒருவராக இருந்தாலும் அதை வெகுஜன மக்களிடம் பரவலாக்கி, அவரவர்களுடைய உரிமையாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு மாபெரும் புரட்சியை செய்தது முகேஷ் அம்பானி, அவருடைய குடும்பம் தான். அந்த அளவிற்கு தன்னுடைய குடும்பத்தினுடைய கடுமையான உழைப்பும் சிறந்த செயலாக்கமும் திட்டங்களும் தான் அவரை உச்சாணிக்கொம்பில் வைத்திருக்கிறிருக்கிறது. எல்லா நிறுவனங்களும் தங்களை உயர்த்தியதற்காக, உடன் இருந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்திருப்பதை நாம் அறிந்து கொண்டு தான் இருக்கிறோம்.டாட்டா தன்னுடைய தொழிலாளர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் செய்த உதவிகள் எல்லாம் சாதாரணமானது அன்று .அந்தப் பரந்த மனப்பான்மை, அந்தப் பெருந்தன்மை தன்னைச் சார்ந்திருக்கிற, எல்லா மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்கிற நலம் விரும்பியாக இருக்கின்ற உன்னதமான எண்ணம் கொண்டவர்கள்.மேலே மேலே உயர்ந்து கொண்டு தான் இருப்பார்கள். முகேஷ் அம்பானியின்  இந்த 1500 கோடி ரூபாய் விலை மதிப்புடைய அந்த வீட்டை தன்னுடைய நண்பருக்கு  தருகிறார் .தன்னுடைய நிறுவனத்தில் இயக்குனராக இருக்ககூடியவருக்கு தானே தருகிறார் என்று சொல்லி, இந்த செயலை புறம் தள்ளி விட முடியாது. அதற்குள்ளே இருக்கக்கூடிய அந்தப் பரந்த மனப்பான்மை தான் நாம் பாராட்டப்பட வேண்டிய விஷயம். குஜராத்தில் நகை வைர வியாபாரி தன்னுடைய தொழிலுக்கு பக்கபலமாக- உறுதுணையாக இருக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு கார்களையும் வீடுகளையும் பரிசாக கொடுத்ததை நாம் கண்டிருக்கிறோம் .பல்வேறு மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------சிறந்த ஊழியர்களுக்கு கார்களை பரிசாக அளித்ததையும் நாம் பார்க்கிறோம். இது தொண்டு உள்ளம் என்று சொல்வதை விட தன்னுடைய நிறுவனம் தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் பிரதிபுரனாக சில லாப விஷயங்களை செய்யும் பொழுது -----------------,மேலும் அவர்களுக்கு ஊக்கம் தந்து நம்மளை உயர்த்துவதற்கு இவர்கள் முனைவார்கள் என்கிற எண்ணத்தில் தான் இந்த செயல்கள் செய்யப்படுவதாக இருந்தாலும் ஆனால் செய்வதற்கு மனம் வேண்டும் .ஒரு ரூபாய்க்கு கூட கணக்கு பார்க்கின்ற நிலை பெற்ற தகப்பனை பெற்ற தாயை சொத்தை பிடுங்கி தெருவிலேயே விடுகின்ற பிள்ளைகள் இருக்கின்ற நிலை சொத்தை அபகரிக்க கணவனுக்கு விஷம் வைத்து இல்லை அடியாள்களை வைத்து கொலை செய்கின்ற மனைவிகள் அண்ணன் தனக்கு பங்காளியாக இருக்கிறானே என்று கொன்ற தம்பி சொத்துக்காக நடந்த போராட்டங்கள் கொலைகள் எவ்வளவோ நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் பெருந்தன்மையான ஒரு நல்ல எண்ணம் கொண்ட முகேஷ் அம்பானியின் உடைய செயல் பாராட்டப்படக்கூடியதுதான் உயர்ந்த நிலையில் இருக்கக்கூடியவர்கள் தங்களுக்கு அணுக்கமாக இருந்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது இந்த உதவுகிற மனப்பான்மை தொடர்ச்சியாக வளர்ந்து வளர்ந்து மற்றவர்களுக்கும் செய்யக்கூடிய ஒரு நிலை உருவாகும்; உருவாக வேண்டும்..

 

 

Tags :

Share via