பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் ஆஜராக ஆணை
2,222 பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் நேரடி தேர்வு முறையில் 400 பேருக்கு விலக்கு விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 400 பணியிடங்களையும் காலியாக வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்ட அறிவிப்பு நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டதுதான் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Tags :