போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு
திண்டுக்கல்லில் போலி சான்றிதழ் கொடுத்து பணி உயர்வு பெற்றதாக ஆத்துார் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக கண்காணிப்பாளர் பத்மநாபன் 60, மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மாதாநகர் பத்மநாபன், 1985ல் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்தார். பதவி உயர்வில் ஆத்துார் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக சேர்ந்தார். 28. 09. 2022ல் பணி ஓய்வு பெற இருந்தார்.இவரது பணி ஓய்வுக்கான பண பலன்கள் அளிக்க சான்றிதழ், பதவி உயர்வு உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்த்தனர். பதவி உயர்வுக்காக பத்மநாபன் சமர்ப்பித்த 10ம் வகுப்பு கல்வி சான்று போலி என தெரிந்தது. அவரது பணி ஓய்வை நிறுத்தி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காலின் செல்வராணி திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். பத்மநாபன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Tags :