இலங்கை துணை தூதரக அலுவலகம் முற்றுகை - மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரி 25ஆம் தேதி சென்னையில் இலங்கை துணை தூதரக அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் இருந்து கடந்த 14ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற 5 விசைப்படகு மற்றும் 27 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 16ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :